Type Here to Get Search Results !

ஞானம் இல்லாதவன் சாக முடிவு செய்து விட்டான்

0
தவம்
 
தவம் செய்பவன் எண்ணங்களின் வழியே செல்லாமல், சுய சிந்தனை மூலமாக எல்லாவற்றையும் ஆராய்ந்து  அறிவாளியாக இருக்கின்றான். அவன் எப்படி முழுமையாக வாழ்க்கையை வாழவேண்டும் என்று பிறந்தது முதல் சமாதி அடையும் வரை ஏனோதானோ என்று வாழ்வது வாழ்க்கையல்ல என்பதை புரிந்தவனாக  இருக்கின்றான். ஒவ்வொரு நொடி பொழுதும் மகிழ்ச்சியாக ஆடல், பாடல் கொண்டாட்டமாக வாழ்க்கையை நடத்திச் செல்கிறான். ஆனால் ஞானத்தை பற்றிய அறிவு இல்லாத மனிதன் தற்போது நரை, திரை, மூப்பு, பிணி, மரணம் ஆகியவற்றில் சிக்கி மீள வழி இல்லாமல் வேதனைப்பட்டு தவிக்கிறான். அவனுக்கு தவம் செய்பவனின் அனுபவம் முழுவதும் தேவைப்படுகிறது. அவன் துன்பத்தில் வாழ பழகிவிட்டான். வேதனையை அனுபவப்பதிலும், சுய அறிவு இல்லாமல் வாழ கற்றுக்கொண்டுவிட்டான். மரணம் அடைந்த பிறகு  சிறப்பான வெகுமதி காத்திருக்கிறது. எவ்வளவு வேதனை அனுபவிக்கிறானோ அந்த அளவிற்கு தன்னை தானே துன்புறுத்தி "நான் யார்" என்பதை உணராமல் உடலையும், உயிரையும் பாதுகாக்காமல் இருக்கிறானோ அந்த அளவிற்கு வெகுமதி அதிகரிக்கும்.    

இப்படி சுயநலமாக தன்னை தான் உணராமல் துன்பப்படும் மனிதன் அடிமை ஆவது மிகவும் எளிது. தன்னை உணராமல் இந்த அற்புதமான வாழ்க்கையை அனுபவிக்காமல் இழந்துவிட்டவன் அடிமையாக்கிகொள்ள அறிவித்தவனாகிறான். எதிர்காலமானது அவனுக்கு கட்டுப்பாடு ஆகிவிட்டது. வாழ்நாள் முழுவம் அவன் மூட நம்பிக்கையில் வாழ்ந்துவிட்டான். கற்பனையிலும், கனவிலும்  வாழ்ந்துவிட்டதால் அவனால் உண்மையை கண்டுகொள்ள முடியவில்லை. இதுவே வாழ்க்கை என்று முழுதும் நம்பிவிட்டான். ஆனால் உண்மையான வாழ்க்கை என்பது இந்த கணப்பொழுதில் உள்ளது. 
  
meditation

ஆனால் தியானம் செய்பவன் சுதந்திரமானவனாக, வெற்றி பெற்றவனாக தன்னை அடிமைபடுத்தும் எல்லா கட்டுப்பாடுகளையும்  எதிர்ப்பவனாக இருக்கிறான். கற்பனையான சொர்கத்தை பற்றிய நம்பிக்கையினை முழுவதும் விட்டு பயப்படக்கூடிய நரகத்தை பற்றிய மிரட்டல் செய்பவனுக்கு எதிரானவன் அவன். எல்லா பழைய மூட நம்பிக்கை முறையும் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் ஒன்றோடு ஒன்று பொருந்தி இருக்க கூடியது. கற்பனையாக இருக்கும் கடவுளின் முன்பு மனிதனை தியாகம் செய்யும் விலங்காக மாற்றுவது தான் அதுவாகும்.

 முற்காலத்தில் மனிதர்களை உயிரோடு கற்சிலைக்கு முன்பு பலியிடப்பட்டார்கள். இன்றைய காலகட்டத்தில் அப்படி யாரும் செய்யமாட்டார்கள். எனினும் மனரீதியாக அந்த நிலை மாறவே இல்லை.மனிதன் இன்னமும் மதத்தின் பெயரில் தியாகம் செய்யப்படுகிறான். இப்போது கல்சிலைக்கு பதிலாக அர்த்தமே இல்லாத பொய் வாக்குகள் இருக்கின்றன. இதையே ஏற்று பழகி விட்டான். ஏனெனில் பிறக்கும் குழந்தை கட்டுப்படுத்தப்பட்ட குடும்பத்தில் தானே பிறக்கிறது?. அந்தக் குழந்தை பெற்றோர்களுக்கும் சமூகத்தில் மற்றவர்களுக்கும் கட்டுப்பட்டதாக உள்ளது. பிறந்த குழந்தை ஆதரவற்றதாக இருப்பதினால் மற்றவர்களுக்கு அவர்கள் சொல்லும் பேச்சை கேப்பதை தவிர வேறு எந்த வழியும் இல்லை பழைய காலத்தில் மனிதர்கள் ஒரு கூட்டமாக  இருந்தவர்கள்.  

எந்தவிதமான தனித்துவமான அறிவும் அவர்களுக்கு இல்லை அவர்கள் சில சுயமரியாதையையும் கௌரவத்தையும் சுயநலனையும் சந்தோஷத்தையும் மனிதனாக வாழ்வதற்கான  அடையாளத்தை விட்டான். பரிணாம வளர்ச்சியில் மனித பிறவியானது அபரிவிதமான ஒன்று. இந்த கவுரவம் ஒரு மனிதனுக்கு இருந்தால் அவனே அடிமையாக்க முடியாது. அவன் ஆன்மாவை  அழித்துவிட்டு அவனை ஒரு இயந்திரமாக மாற்ற முடியாது.      

மனிதன் இதுவரையில் மகிழ்ச்சியாக வாழ்வதாக சமுதாயத்தில் நடிக்கிறான்.அவன் வாழும் வாழ்க்கை பொய்யானது. ஒரு தவம் செய்யும் யோகி கடந்த கால முழுவதும் எதிரானவன் புதிய வாழ்க்கை முறையையும், புதிய வாழ்க்கை முக்கியத்துவத்தையும் உருவாக்க முடியும் என்று அவன் கூறுவான். நமது இலக்குகளை நோக்கி பயணிக்க வேண்டும். நாம் கடவுள் நிலையை அடைய இருக்கிறோம்.நாம் எந்த ஒரு புகழ் பெயருக்காகவும் நம்மை நாமே தியாகம் செய்ய வேண்டிய அவசியம் நமக்கு இல்லை. மனம் போன போக்கில் நாம் வாழப் போவதில்லை நமது சொந்த இலட்சியத்திற்காகவும் ஈடுபாட்டிற்காகவும் தனது சுய சிந்தனைக்காகவும் உணர்வுக்கு ஏற்ப  வாழப் போகிறோம்.  

மகிழ்ச்சி

நாம் நமது வாழ்க்கையை மகிழ்ச்சியாக விழிப்பு நிலையாக உணர்வு நிலையாக கணத்திற்கு கணம் வாழ்வோம். எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையையும் மூடநம்பிக்கைகள் குறித்தும் முட்டாள்களாக நாம் ஒருபோதும் இருக்கப் போவதில்லை.நாம் விழிப்பு நிலையில் வாழ்வோம் நாம் மனமற்ற நிலையில் வாழ்வோம் ஒரு ஞானி எதிர்காலம் முழுவதையும் தன்னுள் உள்ளடக்கியவன் அறிந்தவன். ஞானம் இல்லாதவன் மரணிக்க கூடியவன். அப்பொழுதும் அவன் பிணக்குழியை ஆழமாக தோண்டி கொண்டிருப்பவன். இவர்கள் இறந்த மக்களைக் கண்டும் அஞ்சுவார்கள். பிணக்குழியை சரியான முறையில் தோண்டாவிட்டால் இறந்தவனும் வருவான் என்று பயப்படுவார்கள். உலகின் மிகப்பெரிய பணக்கார நாடுகள் தயாரித்த அணு ஆயுதங்களும் நியூக்ளியர் பாம் மற்றும், மிகவும் ஆபத்தான ஆயுதங்களும் தன்னைத் தானே மாய்த்துக் கொள்ள கண்டு பிடிக்கப்பட்ட ஆயுதங்கள் ஆகும். 

ஞானம் இல்லாதவன் சாக முடிவு செய்து விட்டான். நல்ல சிந்தனை உள்ள அறிவாளிகளையும் அவன் அளித்து விடும் முன்பே முற்றிலும் துண்டிக்க வேண்டிய நிலையில் பழமையான மரபுகளில் இருந்தும் பழமையான மதங்களில் இருந்தும் பழமையான மூட நம்பிக்கையில் இருந்தும் அவன் விட்டு விலக வேண்டும். மதங்கள் கடந்த காலத்தில்  நிராகரித்தன, நாம் உலகை நேசிக்கவும் பழமையை முழுவதுமாக அகற்ற வேண்டும்.  

ஞானம் இல்லாத மனிதனின் வளர்ச்சியானது நிரந்தரம் இல்லை, அவன் தொடர்ந்து பரிணாமத்தில் வாழவில்லை, சரியான ஒழுங்குமுறை இல்லை. ஒரு ஞானி ஞானம் இல்லாத மனிதனின் மரணத்தை அறிவித்தவனாகிறான். ஒரு ஞானி பிறப்பை தெரிவித்தவனாகிறான் எந்தவிதமான நாடு மதம் ஆண் பெண் வேறுபாடு எதுவும் இல்லாத வெள்ளை கருப்பு நிறம் வேறுபாடு இல்லாத எந்த பாகுபாடும் இல்லாத அனைவரும் சமம் என்று நினைப்பவனே  ஞானி.


Tags

Post a Comment

0 Comments