Type Here to Get Search Results !

யோகத்தின் வழியே கடவுள் நிலையை அடைதல்

0
தியானம்


யோகத்தின் வழியே கடவுள் நிலையை அடைதல்: 

நாம் இந்த பூமியில் பிறந்து, உழன்று,மரணம் அடைந்து வருகிறோம் . ஆனால் நாம் இந்த பூமியில் பிறந்து உழன்று ஐந்து புலன்களின் மூலம் இகழோக இன்பங்களை அனுபவித்து முடிவில் செத்துப்போகின்றோம். நாம் எதற்காக இந்த பிறவி எடுத்து இன்ப துன்பங்களை அனுபவித்து கடைசியில் செத்துப் போகின்றோம் என்பதை நன்கு உணர்ந்து,ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

அது எப்படி பார்க்க வேண்டுமெனில் இப்பிறவி வருவதற்கு முன்பு நாம் எந்த உயிரினமாய் இருந்தோம் என்பதையும் இனி நாம் இறந்த பிறகு எந்த இடத்திற்கு செல்வோம் என்பதையும் ஆராய வேண்டும். கடவுளை காண்பது எப்படி!. அந்த கடவுள் நிலையை அடைவது எவ்வாறு என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த கடவுள் நிலையை அடைய புறத்தில் தேடாமல் நம் உள்ளே தேட வேண்டும்.

அந்த கடவுள் தன்னை உணர்வதற்காகவே தன்னுள் மறைந்து இருக்கிறார். அதனால் தன்னுள் அடங்கி தான் தோன்றாமல் தோன்றும் பொருளாய் ஆதி அந்தமாய் எங்கும் நிறைந்து நித்திய வஸ்த்துவாக விளங்குகிறார். அவ்வாறு நமக்குள் ஒழிந்து இருக்கும் கடவுளை காண்பதற்க்காக இந்த மனித பிறவி நமக்கு கிடைத்து உள்ளது. அதனால் ஞானிகள் வேத சாஸ்த்திர நூல்களில் எழுதியுள்ள உபதேசங்களை நன்கு படித்து அவர்கள் காட்டிய வழிகளை பின்பற்றி,உண்மை நிலையை உணர்ந்து விடாமுயற்சியுடன் கடைபிடித்து அதில் உண்டாகும் இன்பத்தை உணர்ந்து கடவுள் நிலையில் லயிக்க வேண்டும். சித்தவித்தை பழக வேண்டும். 

மனம்,புத்தி,அகங்காரம் இவைகளை அடக்கி மனதை வேளியே செல்லவிடாமல் புருவமத்தியில் மனதை ஒடுக்கி ஜீவனில் மனதை லயித்து இருக்க பழகி கொள்ள வேண்டும். இதனால் உடலும்,மனமும், தூய்மை அடைந்து உடலிலுள்ள நோய்களை குணப்படுத்தி,72 ஆயிரம் நாடி நரம்புகளை ஊக்குவிக்கிறது. இதனால் உடலும் மனமும் பலம் அடைகிறது. மனதை ஒருநிலைப்படுத்தி மன அலைசுழலை குறைத்து நினைவாற்றலை அதிகப்படுத்துகிறது. மேலும் ஆழ்ந்த அமைதியை கொடுக்கிறது. இந்திரிய சக்தியை அதிகபடுத்தி ஆன்மபலத்தை கொடுக்கிறது.

யோகம் என்றால் என்ன:

இடகலை(சந்திரகலை), பிங்கலை(சூரிய கலை),சுழுமுனை இந்த மூன்று நாடிகளும் ஒன்றாக சேருமிடத்திற்கு சுழுமுனை என்று பெயர். சித்தவித்தை மூலம் சுழுமுனையை நோக்கி மெதுவாகவும், லேசாகவும் மேல் நோக்கி ஊத ஊத சுழுமுனை திறக்கும் பிரம்மரந்திரத்தை தட்டி திறந்துசாகா நிலையை அடையலாம். அந்த சாகா நிலையை அடையும் போது ஜீவன் உடலைவிட்டு வெளியே செல்லாமல் தன்னுள் சுழுமுனையில் ஒடுங்கிவிடும். இந்த நிலையை அடையவே சித்தவித்தை பயிற்சி செய்கின்றனர். 

யோக சாதனையை விடாமுயற்ச்சியுடன் செய்துவந்தால் நிச்சியமாக மோஷ்சம் அடையலாம். மிகவும் விழிப்புணர்வுடன், உள்முகமாய் பார்வையை மேலே நிறுத்தி பிராணனை சுழுமுனையில் ஒடுக்கி அந்த பேரானந்த நிலையை அடைவதே ஜீவேஸ்வர ஐக்கியம் ஆகும்.

ஈஸ்வரமதம்:

ஈஷ்வரனுக்கு கூடன்,கூடஸ்தன்,கடவுள் என்றெல்லாம் பெயர் உண்டு. ஸர்வ வியாபிக்கு இப்பெயர்கள் எப்படிப் பொருந்தும்?. கடம் +உள். கடம் என்றால்  சிரசு(தலை). சிரசினுள் இருப்பது உயிர் =கடவுள். உயிர் இல்லாவிடில் உலகமும் இல்லை; ஈஷ்வரனும் இல்லை. உயிர் உள்ளபோது மட்டும் தான் ஈஸ்வரன் உண்டு. 

தேவோ ஜீவ சதாசிவ:" அந்த உயிர் ஈஸ்வர அம்சமாகிறது. உயிரினுடைய உற்பத்தி ஈஸ்வரனிலிருந்து உற்பத்தியான உயிர் கீழே பரவிக்கிடக்கிறது. கீழேதான் உலகம். கீழே பரவியதாலேதான் உலகம் உற்பத்தியாயிற்று. அது, இது என்னும் பலவித எண்ணங்களால் பந்தத்தை விட்டு மேலே சென்றால் ஈஷ்வரனை சந்திக்கலாம். அன்றுதான் ஈஸ்வரமதத்தவர் ஆவார்கள். தன்னிலிருக்கின்ற ஈஸ்வரனை தன்னில்தானே ஸ்தாபிப்பது ஈஸ்வரமதம் ஆகும்.


Tags

Post a Comment

0 Comments